கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷட்டர் பிரசாரம் மேற்கொண்டார்.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலிலில் போட்டியிட வாய்ப்பு நிராகரித்ததை அடுத்து அண்மையில் ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரஸில் சேர்ந்து, உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அக்கட்சி சார்பாக போட்டியிட்டுள்ளார்.

இந்த நிலையில் உப்பள்ளியில் அவர்  பேட்டி அளித்தபோது “பாஜக காரணமே இல்லாமல் எனக்கு சீட்டு வழங்க மறுத்தது எனது சுயமரியாதைக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. மோடியே அழைத்தாலும் மீண்டும் பாஜகவுக்கு திரும்ப மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.