தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் வழங்கியுள்ள சின்னம் எங்களிடம் தான் உள்ளது என கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி ஏன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையும் என்றார். மேலும் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்கள் என்று யாரும் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.