மோடிக்கும் பயப்பட மாட்டோம் ஈடிக்கும் பயப்பட மாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பாஜகவின் தொண்டர் படை. அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் சோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்தி உள்ளனர். 2019 , 2021தேர்தல்களைப் போல வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவை விரட்டி அடிக்க வேண்டும். மோடிக்கும் பயப்பட மாட்டோம் ஈடிக்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.