அரசு அமைப்புகளால் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய ஐ டி துறை செயலர் எஸ் கிருஷ்ணன், மொபைல் போன் ஒட்டு கேட்டு விவகாரம் தொடர்பான உண்மை கண்டறிய CERT-In அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கும் படி கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.