கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் குக்கே சுப்பிரமண்யா  பகுதியை சேர்ந்த இந்து மைனர் பெண் ஒருவருடன் கல்லுகுண்டி பகுதியை சேர்ந்த மாற்று மத இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அந்த பெண்ணும், இளைஞரும் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று அந்த மைனர் பெண்ணுடன் இளைஞர் வெளியே சென்றுள்ளார்.

அப்போது அவர்களை சூழ்ந்து கொண்ட கும்பல் ஒன்று இளைஞரை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் இளைஞர் மீது போக்சோ  வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.