கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மேற்குவங்கத்தில் ஆளுநருக்கு எதிரான பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண் ஒருவர் மேற்குவங்க ஆளுநர் டாக்டர் சிவி ஆனந்த போஸ் மீது பாலியல் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆளுநர் மீது ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட கதைகளுக்கு பயப்பட மாட்டேன். யாரேனும் என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால், அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.