பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் ஒரு திருமண விழா நடைபெற்றது. இங்கு திருமணத்திற்கு முன்பு நடைபெறும் திலக விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த விழாவின்போது சில பெண்கள் மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அஞ்சனி குமார் என்ற 27 வயது வாலிபர் பணம் கொடுத்தார். அப்போது மேடைக்கு கீழே இருந்த ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து வாலிபரை தலையில் சுட்டு விட்டார்.

இதில் வாலிபர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் மரணத்திற்கு பஞ்சாயத்து தலைவர் மகேஷ் ஷர்மா தான் காரணம் என்று குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதாவது அங்கு பிசிஎஸ் தேர்தல் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு எதிரான வேட்பாளரை அஞ்சனி குமார் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதனால்தான் பிளான் போட்டு வாலிபரை அவர்கள் கொலை செய்துவிட்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.