நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குடியரசு தின விழாவுக்கான அணிவகுப்பை காணும் மக்கள் கூட்டத்தை கருதி ஜனவரி 26 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

காலை 6 மணி வரை 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதன் பிறகு வழக்கமான முறைப்படி ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அணிவகுப்புக்கு கலந்து கொள்வதற்கு மின் அழைப்பிதழ் அட்டைகள் அல்லது இ டிக்கெட்டுகள் வைத்திருக்கும் நபர்கள் மெட்ரோ ரயிலில் இலவசக் கூட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.