இந்தியாவில் மக்களுக்கு மத்திய அரசு விரைவில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட உள்ளது. அதாவது விரைவில் சமையல் எண்ணெயை விலை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் நுகர்வோர் விவகார அமைச்சகம் சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியது. அதில் உலக சந்தை நிலவரத்தை கருதி சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் மேல்முறையீட்டை தொடர்ந்து படிப்படியாக விலையை குறைக்க நிறுவனங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.