இந்திய ரயில்வே துறை பல முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவையை அமல்படுத்தி வரும் நிலையில் பயணிகள் பலரும் தற்போது அதிக அளவு ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை வழங்கப்பட உள்ளதாக செய்தி வெளியானது.

ரயிலில் 60 வயது நிரம்பிய ஆண் பயணிகளுக்கு 40 சதவீதம் சலுகையும் 58 வயது நிரம்பிய பெண் பயணிகளுக்கு 50 சதவீதம் சலுகையும் வழங்கப்படும் என ஒரு செய்தி வெளியானது. இந்த நிலையில் இது குறித்து ரயில்வே நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ள நிலையில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் ரயில்வே சார்பில் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே இது போன்ற செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.