தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் (101) இயற்கை எய்தினார். 1971 முதல் 76 வரை கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இவர் தலைமை செயலராக இருந்தார். பின்னர் 1980ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு இவர் 100 வயதை தொட்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், கருணாநிதி ஆகியோர் எப்படி பணி செய்வார்கள் என்று இவர் புத்தகமும் எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மரியாதையுடன் இறுதிச் அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இராஜாஜி, காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றியவர் சபாநாயகம். அவரை கவுரவிக்கும் வகையில், துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு நடத்த உத்தரவிட்ட முதல்வர், உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.