ஐபிஎல் 2024 சீசனுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தது சர்ச்சையானது. இதனிடையே ஹர்திக் கேப்டன்சியில் ரோகித் அதிருப்தியில் இருப்பதாக MI வீரர் ஒருவர் கூறியதாக பல ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் ஹிட்மேன் பங்கேற்பார்.