கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கேரளாவின் முதல்வராக 2 முறை இருந்தவர் ஆவர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில முழுவதும் அரசு சார்பில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள் வரவுள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.