டெல்லியின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த பெண்ணின் கணவர் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனால் தனித்து விடப்பட்ட 20 வயது பெண்ணுக்கு அவரது உறவினர் ஒருவர் அப்ஜர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உறவினர் அப்ஜர் மீது ஆத்திரமடைந்த அந்தப் பெண் அவரை பழிவாங்க நினைத்து தனது தோழியின் கணவருடன் இணைந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாஸ்திரி பூங்காவுக்கு அருகே உள்ள பெல்லா பண்ணைக்கு தனது உறவினரை வரவழைத்துள்ளார். அங்கு வைத்து திட்டமிட்டபடி கத்தியால் குத்தி அப்ஜரை கொலை செய்து விட்டு அவரது சடலத்தை அதே பகுதியில் மறைத்து போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். அடையாளம் தெரியாமல் சடலம் ஒன்று கிடைப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே விரைந்து வந்தவர்கள் சிசிடிவி கட்சிகளை ஆராய்ந்து கொலை செய்த பெண்ணையும் அவருக்கு உதவி செய்தவரையும் கைது செய்துள்ளனர்.