முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்..

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் முன்னால் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 3ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னால் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தன் தரப்பு வாதத்தை கேட்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டார். அதாவது, பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அவர் வழக்கு தொடர்ந்தார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கானது நாளை விசாரிக்கப்படும் நிலையில் வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை தீர்ப்பளிக்கிறார்..