தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, குமரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை ஒரு சில இடங்களில் கன மழை பெய்த நிலையில் பல மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.