மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

வெள்ள நிவாரணம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர் என முதல்வர் மு.க  ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த அமித்ஷாவை சந்திக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்பிக்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சுமார் ரூபாய் 19,692 கோடி வழங்கவும், 4 தென் மாவட்டங்களுக்கு ரூபாய் 18,214 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டிசம்பரில் 2 இயற்கை பேரிடர்களுக்கும் மத்திய அரசிடம் இருந்து ரூபாய் 37,907.19 கோடி தமிழக அரசு நிவாரணம்கோரியுள்ளதாக கூறியுள்ளார். மாநில மக்களின் நலனில் அக்கறை கொண்டு 2 பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு ரூபாய் 2,100 கோடி செலவிட்டுள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.