கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை பாடி பில்டரான பிரவீன்நாத் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதனிடையே பிரவீன்நாத்தின் மனைவி ரிஷானா ஐஷூவும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பூச்சி மருந்தை சாப்பிட்ட ரிஷானா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதில் ரிஷானா ஐஷு முன்னாள் மிஸ் மலபார் ஆவார்.

பிரவீன் மற்றும் அவரது மனைவி பற்றி சமூகவலைதளங்கள் வாயிலாக வந்த செய்திகள் தற்கொலைக்கு காரணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது தற்கொலை தொடர்பாக திருநங்கைகள் ஆன்லைன் ஊடகங்களே காரணம் என கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல் மந்திரி மற்றும் டிஜிபியிடம் புகாரளித்துள்ளனர்.

பிரவீனும் ரிஷானா ஐஷும் கடந்த காதலர் தினம் அன்று திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் பிரிந்து செல்வதாக சில தினங்களுக்கு முன் சில இணைய ஊடகங்களில் செய்தி பரவியது. அதனை தொடர்ந்து பிரவீன் மீது சமூகஊடகங்களில் விமர்சனம் எழுந்தது. இதனால் பிரவீன் சமூகவலைதளங்களில் தவறான விமர்சனங்களை மறுத்து பதிவிட்டு வந்த நிலையில், தற்கொலை செய்துள்ளார்.