தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அவர் அறிவித்த நிலையில் அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதன் பிறகு பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு முறைப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்தனர். இந்நிலையில் எதனால் வரை தங்கள் குழந்தைகளின் பெயர்களை இருவரும் வெளியிடவில்லை. தற்போது முதன் முறையாக குழந்தைகளின் பெயர்களை நயன்தாரா அறிவித்துள்ளார். “உயிர் ருத்ரோனில் N சிவன்”, “உலக் தைவிக் N சிவன்”ஆகியவை தான் அந்த பெயர்கள்