திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அருகே முட்புதரில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே பொதுமக்கள் புதருக்கு அருகே சென்று பார்த்த போது தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை அழுததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பச்சிளம் குழந்தையை பிறந்தவுடன் புதரில் வீசி சென்ற தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.