உ.பி.,யில் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த முக்தர் அன்சாரி (63) சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மவு சதார் தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். முக்தார் அன்சாரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், பண்டா, மவு, காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.