இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் கேஸ் அடுப்பும் முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். 18 வயது பூர்த்தியான பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பிபிஎல் கார்டு, பிபிஎல் பட்டியலில் பெயர் அச்சிடுதல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு நகல், வயது சான்றிதழ் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க www.pmuy.gov.in என்ற இணையதளத்தில் உஜ்வாலா யோஜனா 2.0 என்பதை கிளிக் செய்து மொபைல் எண் மற்றும் பிற அனைத்து தகவல்களையும் டைப் செய்து திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.