பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர், காம்போடி பகுதியில் இன்று பொதுமக்கள் மீது போராட்டக்கார்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், காயமடைந்த பலர் இம்பாலில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க ராகுல் மணிப்பூர் சென்றுள்ள நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது.