சென்னையில் குழந்தைகளை துன்புறுத்திய பாஜக நிர்வாகி மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளியின் உரிமையாளரும், பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி பள்ளியில் குழந்தைகளின் கை, கால்களை கட்டி துன்புறுத்தியுள்ளார். இது குறித்து மீனாட்சி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மீனாட்சியை இன்று கைது செய்தனர்.

இது தொடர்பான விசரணையில், சிறுவனை துன்புறுத்தியதுடன், அதனை கேட்க சென்ற தாய் சரண்யாவை மிரட்டியது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.