சென்னை ராயபுரத்தில் மதியம் 3 மணி முதல் 4 மணி வரை 5.3 செமீ மழை பெய்துள்ளது. ஒரே மணி நேரத்தில் இவ்வளவு மழை கொட்டித் தீர்த்ததால் சாலைகள் வெள்ளக் காடாக மாறியிருக்கின்றன. அண்ணாநகர் – 4.89 செமீ, திருவிக நகர் – 4.68 செமீ, தேனாம்பேட்டை – 3.87 செமீ மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன் 2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தபோதுதான் இப்படி மழை கொட்டியது.