தேசிய தலைநகரம் டெல்லியில் மின்சார கட்டணம் அதிகமாக வாய்ப்புள்ளது. மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. அந்த வகையில் மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் மின் கொள்முதல் கட்டணத்தை 10% உயர்த்த மின் விநியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன.

பொதுமக்களின் ஆலோசனைக்கு அடுத்து இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. நிலக்கரி மற்றும் எரிவாயு விலை உயர்வு தான் டெல்லியில் மின்க்கட்டண உயர்வுக்கு காரணம் என டெல்லி நிர்வாகமானது தகவல் தெரிவித்துள்ளது.