தமிழக அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கி இருக்கிறது. அதாவது, சில மாநில அரசு ஊழியர்களின் சம்பளமானது 6% உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு மாநில அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மின்சார வாரிய ஊழியர்களின் ஊதியமானது உயர்த்தப்பட்டுள்ளது.

மின்சார வாரிய ஊழியர்கள் உடனான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சம்பள உயர்வு கோரி கடந்த 1 மாதமாக தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையில் இந்த ஊழியர்களின் சம்பளத்தை 6% உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.