சென்னையில் தினம் தோறும் ஏராளமானவர் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரயில்கள் இன்று இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.