தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகம் நடைபெற்று உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் ஆறு பேரும், தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே நடந்த விபத்தில் மூன்று பேரும் உயிரிழந்தனர்.