தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாத சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் மாற்றம் வரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தேனியில் போட்டியிடும் தினகரன் 50 சதவீதம் வாக்குகளை பெற்று வெல்வார் என்ற அவர், ஓபிஎஸ் வெற்றி முடிவு செய்யப்பட்ட ஒன்று என தெரிவித்தார். சுயேச்சையாக போட்டியிட்டு ஓபிஎஸ் வெற்றி பெற்ற பிறகு தென் மாவட்ட மக்கள் அவர் பின்னால் அணி திரளுவார்கள். தேர்தல் முடிவில் நிச்சயம் இதை எதிர்பார்க்கலாம் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.