தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் இதனை ஏற்று பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருதி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.