பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முதலாக பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்ற பின்பு இன்று நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணி சார்பில் ஈபிஎஸ்-க்கு பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதாவின் 10 தல உருவங்களுக்கு மத்தியில் ஈபிஎஸ்-ன் புகைப்படத்தை இணைத்து போஸ்ட்டர் ஒன்றை தயாரித்து வைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.