பொதுவாகவே ஆடியில் அம்மனும், புரட்டாசியில் பெருமாளும் மார்கழி மாதத்தில் அனைத்து தெய்வங்களும் என மாதத்திற்கு ஒரு தெய்வம் வழிபட முன்னோர்கள் வகுத்துள்ளனர். இருந்தாலும் ஆடியில் பலத்த காற்று வீசும். அப்படி வீசும் காற்று விஷக்காற்று என்பதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அம்மன் கோவிலில் உள்ள கிருமி நாசினியான வேப்பிலையின் மனத்தை சுவாசிக்கும் போது அந்த விஷக்காற்று முறியடிக்கப்படுவதுடன் இயற்கையான ஆக்ஸிஜனும் கிடைக்கின்றது. அதுவே புரட்டாசி மாதம் மழைக்காலம் என்பதால் மக்கள் வீடுகளில் அப்போது கிடைக்கும் சத்து மிகுந்த காய்கறிகளை படைத்த பெருமாளை வழிபாடு செய்வார்கள். இதே போல மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன் படலம் வழியாக ஆரோக்கியமான உடல் நலனை தரும் காற்று அதிகம் பூமிக்கு இறங்கும்.

இது நம்முடைய வியாதிகளை கட்டுப்படுத்தும் என்பதால் மார்கழி மாதத்தில் அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெரிவித்து கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறுகின்றனர். நம்முடைய உடலில் 80 சதவீதம் ஆக்ஸிஜனும் 20% கரியமில வாயுவும் இருப்பது அவசியம். தவறான சில பழக்கவழக்கங்களால் கூடுதலாகிவிட்ட விஷ வாயுவான கார்பன் டை ஆக்சைட்டை விரட்டி ஆக்சிஜனை நம்முடைய உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் ரத்தத்தில் பெருக்கி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும். இந்த நல்ல வாயுவை சுவாசிப்பதற்காக அதிகாலையில் மார்கழியில் எழுவது என்பதை தெய்வத்தின் பெயரால் கட்டாயப்படுத்தி முன்னோர்கள் வைத்துள்ளனர்.