சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் மரங்களில் இருந்தும், ஆட்டோரிக்ஷாவில் இருந்தும் கோடிக் கணக்கிலான பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கர்நாடக மைசூரிலுள்ள சுப்ரமணிய ராய் வீட்டில் வருமான வரித் துறையினர் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்து உள்ளனர். இவர் ராய் புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமார் ராயின் சகோதரர் ஆவார். சுப்ரமணிய ராய் வீட்டில் உள்ள மாமரத்தில் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ரூபாய்.1 கோடி கணக்கில் வராத பணத்தோடு 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த சில வாரங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கர்நாடகாவில் வருமான வரித் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.