பொதுவாகவே மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கேரள அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மாநில வரலாற்றில் முதன்முறையாக, கேரளாவில் திருத்தப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களில் அரசியலமைப்பின் முன்னுரை அடங்கும்.

சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி அரசு, குழந்தைகளின் மனதில் அரசியலமைப்பு விழுமியங்களை புகுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் முன்னுரையை சேர்க்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.