அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா வருகிற 22ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

குடமுழுக்கையொட்டி மத்திய அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் வரும் ஜனவரி 22ம் தேதி அரை நாள் (மதியம் 2.30 மணி வரை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.