மத்திய அரசு வருங்கால வைப்பு நிதியின் இபிஎப்ஓ வட்டியை 0.10 சதவீதம் உயர்த்தியுள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாத சம்பளம் பெருவோரின் வருங்கால செலவீடுகளுக்காக இபிஎப்ஓ கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆண்டு வட்டியாக 8.15 சதவீதம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை மத்திய அரசு 8.25 சதவிதமாக உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது நீண்ட கால சேமிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.