நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1148 வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக 2.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே உயர்கல்வி பயில வரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதன் மூலம் 34 சதவீதம் கூடுதல் மாணவிகள் கல்லூரிக்கு வருகின்றனர். அரசு பள்ளியில் படித்த அனைத்து ஏழை எளிய மாணவிகளுக்கும் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.