படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாகப்படினம், கடலூர், வேலூர்,திருச்சிராப்பள்ளி,திருப்பூர்,நாமக்கல், திருவண்ணாமலை, செங்கப்பட்டு, தஞ்சாவூர்,சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, கரூர், ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை  17.02.2024 தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in- என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு 04362 – 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.