தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் (2024-25) விருப்பப் பாடத்திற்கான மதிப்பெண் (35 மார்க்), இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது விருப்பப் பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் = 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் பள்ளிக் கல்வித்துறை மாற்றம் செய்ததுள்ளது.