மே 10ஆம் தேதிக்குள் பொது தேர்வு முடிவுகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் ஏப்ரல் 20-ம் தேதியோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம்தேதி முடிவடைந்தது. பதினோராம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே 12 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதே போன்று பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியும் மே 3 ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளதுஇதையடுத்து, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5, 11 மற்றும் 10 ஆம் வகுப்பு முடிவுகளை மே 10ல் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ல் வெளியாவதாக இருந்தது.