தமிழக சட்டப்பேரவையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து அரசியல் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன. இதற்கு பதிலளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். பால் லிட்டருக்கு 35 ரூபாய் கொடுத்து நாம் வாங்குகிறோம்..

வெளிமாநிலத்தவர்கள் அதை ஐந்து முதல் ஏழு ரூபாய் அதிகமாக கொடுத்து வாங்குகிறார்கள். கொள்முதல் விலை குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் எப்போதும் போல் தொடர்ந்து பால் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்து