சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டி கீழே தள்ளியதில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் கடந்த 10 நாட்களாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று  வந்தார், இந்த நிலையில் முதியவர் சுந்தரம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

திருவல்லிக்கேணி பகுதியில் மாடு முட்டி சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழந்ததற்கு மாடு முட்டியது மட்டுமே காரணம் என சொல்லிவிட முடியாது. அவருக்கு ஏற்கனவே நிறைய உடல் நல பாதிப்புகள் இருந்துள்ளது என கூறியுள்ளார்.