சென்னையில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகள் பிடிபட்டால் இனி பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் என்று சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி முதல் முறை மாடு பிடிபட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இனி ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அதே மாநாடு பிடிபட்டால் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அபராத விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த 9 மாதங்களில் சென்னையில் 3648 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதமாக 65.80 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாடுகள் பிடிபட்டால் இனி ரூ.10,000 வரை அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!
Related Posts
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read moreALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read more