சென்னையில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகள் பிடிபட்டால் இனி பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் என்று சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி முதல் முறை மாடு பிடிபட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இனி ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அதே மாநாடு பிடிபட்டால் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அபராத விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த 9 மாதங்களில் சென்னையில் 3648 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதமாக 65.80 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.