
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. மலை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து இன்று நேரடியாக தூத்துக்குடி சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதன் பிறகு நெல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளையும் அவர் ஆய்வு செய்வார் என தெரிகிறது.