தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. இதற்கான பணிகளில் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பெய்த மழையில் சிக்கி பழுதான வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

காப்பீட்டு நிறுவனங்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர், இதுவரை 2320 வாகனங்களுக்கு காப்பீட்டு தொகைக்கான விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் விண்ணப்பங்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் நிறுவனங்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.