ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா சஜ்தேவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தனது மனைவி ரித்திகா மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரித்திகா சஜ்தே ஜோடியை ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள். ரோஹித் சர்மா தற்போது ராஜ்கோட்டில் இந்திய அணியுடன்  இணைந்துள்ளார். இன்று புதன்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறார். ரோஹித்துக்கு ஆஸ்திரேலிய அணிக்கு  எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டது, இதனால் அவர் உலகக் கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவார்.

இதனிடையே ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா சஜ்தேவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மும்பை விமான நிலையத்திற்கு செல்லும் முன் ரோகித் ஷர்மா காரில் இருந்த மனைவி ரித்திகாவை கட்டிப்பிடித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ரோஹித்-ரித்திகாவின் வீடியோவை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.

இந்தியா கிளீன் ஸ்வீப் செய்ய விரும்புகிறது :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தற்போது 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை கிளீன் ஸ்வீப் செய்ய முயற்சிக்கும். மொஹாலியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்தூரில், டிஎல்எஸ் அடிப்படையில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.