பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் முசாபர் நகரில், கூலித் தொழிலாளியான சஜ்ஜத் கோகர் என்பவர் தனது மனைவி கவுசர் மற்றும் 7 குழந்தைகளை கோடாரியால் தாக்கி கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பணச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர், மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவியுடன் சேர்த்து எட்டு மாதங்கள் முதல் 10 வயதுக்குட்பட்ட நான்கு மகள்கள் மற்றும் மூன்று மகன்களை வெட்டி கொலை செய்த அவரை போலீசார் கைது செய்தனர்.