பசிபிக் பெருங்கடலின் பாலினேசிய பகுதியில் உள்ள சமோவாவில் ஒரு விசித்திரமான சட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் பிறந்தநாளை மறக்கும் கணவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, சமோவாவில், கணவர்களின் இந்த மறதிக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

சமோவாவில், கணவன் தனது மனைவியின் பிறந்தநாளை மறந்துவிட்டால் ஒருமுறை எச்சரிக்கப்படுவார். அதே தவறை இரண்டாவது முறை செய்தால், கணவருக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய சமோவாவில் ஒரு சிறப்புக் குழுவும் உள்ளது.