பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்துள்ளது. சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மிக அதி கனமழை பெய்துள்ளது. 10 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், செயற்கை மழைக்கான மேக விதைப்பால் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தாக ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.